Monday, June 28, 2010

கடைசி வார்த்தைகள்!

பிரபலமானவர்கள் தங்கள் மரணத்தின் போது பேசிய கடைசி வார்த்தைகள் இவை..
இந்த வார ஆனந்த விகடனில் வெளியானவை இதோ உங்களுக்காக...

மகாத்மா காந்தி:
'ஹே ராம் !'

தாமஸ் ஆல்வா எடிசன்:
"விளக்கை எரியவிடுங்கள் என் ஆவி பிரியும்போது வெளிச்சம் இருக்கட்டும்!"

பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்:
"இறக்கும் மனிதனால் எதையும் எளிதாகச் செய்ய முடியாது!"

பாபர் (மொகலாயப் பேரரசர்):
தன் மகன் ஹுமாயூனிடம்...
"இந்தியாவில் உள்ள இந்துக்களைத் துன்புறுத்தாதே!"

டயானா:
"கடவுளே! என்ன நடந்தது எனக்கு?"

மேரி க்யூரி:
"என்னைத் தனிமையில் இருக்க விடுங்கள்!"

கிளியோபாட்ரா:
பூ நாகத்தைக் கையில் பிடித்துக் கொண்டு, "ஆஹா.. இதோ.. என் முடிவு இங்கே இருக்கிறது!"

ஆன் (இங்கிலாந்து ராணி):
தன் உதவியாளரிடம்,
"மக்களின் நன்மைக்காக கருவூலப் பணத்தைப் பயன்படுத்துங்கள்!"

நெப்போலியன்:
"பிரான்ஸ்.. ஆர்மி... ஜோஸ்பின்!"

வின்ஸ்டன் சர்ச்சில்:
"எனக்கு எல்லாமே போர் அடிக்குது!" இந்த வார்த்தைகளுக்குப் பின் கோமாவுக்குச் சென்று 9 நாட்களுக்குப் பின் மரணத்தைத் தழுவினார்.

ஜூலியஸ் சீஸர்:
"யூ டூ புரூட்டஸ்?"

பெருந்தலைவர் காமராஜர்:
தன் உதவியாளரிடம், "வைரவா விளக்கை அணைத்து விடு!"

என்ன நண்பர்களே உங்களுக்கும் ஏதாவது பிரபலங்களின் க்ளைமாக்ஸ் வசனங்கள் தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்களேன்!

No comments:

Post a Comment