Wednesday, December 28, 2011

அறிந்துகொள்ள வேண்டிய அவசர எண்கள்

போலீஸ்:
100

போலீஸ் SMS:
9500099100

போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS:
9840983832

தீயணைப்புத் துறை:
101

போக்குவரத்து விதிமீறல்:
103

விபத்து:
100, 103

போக்குவரத்து விதிமீறல் SMS:
9840000103

ஆம்புலன்ஸ்:
102, 108

பெண்களுக்கான அவசர உதவி:
1091

குழந்தைகளுக்கான அவசர உதவி:
1098

அவசர காலம் மற்றும் விபத்து:
1099

மூத்த குடிமக்களுக்கான அவசர உதவி:
1253

தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி:
1033

கடலோரப் பகுதி அவசர உதவி:
1093

இரத்த வங்கி அவசர உதவி:
1910

கண் வங்கி அவசர உதவி:
1919

Sunday, December 11, 2011

'காலரா' -சில தகவல்கள்

காலரா என்ற பெயரைக் கேட்டவுடனேயே நமக்கு பீதியைக் கிளப்புகிறது. மருத்துவம் வளர்ந்துவிட்ட இக்காலத்திலும் இந்நோயினால் கணிசமானோர் மரணமடைகின்றனர். இந்நோய் பற்றிய சரியான விழிப்புணர்வின்மையும் தாமதமான சிகிச்சையாலுமே பெரும்பாலும் இந்த மரணங்கள் நிகழ்கின்றன. தமிழகத்தில் மழையின் பாதிப்பால் காலரா பரவி வருவதாக செய்தி வரும் இவ்வேளையில் இது பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்வது அவசிமென்பதால் இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்நோய் Vibrio
Cholerae என்ற நுண்கிருமிகளால்
உண்டாகிறது. அசுத்தமான
குடிநீரால்தான் வேகமாக இந்நோய்
பரவுகிறது. அதிக அளவு வெப்பம்
உடைய, மனித நெருக்கம் உடைய
பகுதிகள்தான் பெரும்பாலும்
பாதிக்கப்படுகின்றன. ஒருவருக்குஇந்நோய் உண்டானால்,
அவர் வெளியேற்றும் மலத்தில்
இருந்து வெளியேறும்
ஆயிரக்கணக்கான ‘விப்ரியோ’ கிருமிகள்
மற்றவருக்கு இந்நோயை பரப்பக்
காரணமாகின்றன. ‘விப்ரியோ’ நோய்க்
கிருமிகள் உடைய நீரை அந்தப்
பகுதியைச் சேர்ந்த
அனைவருமே பருகுவதால் அந்தப்
பகுதியில் உள்ள அனைவருமே நோயால்
பாதிக்கப்படுகின்றனர்.

நோயின் அறிகுறிகள் : நோயின்
தாக்குதலுக்கு ஆளான நோயாளிக்கு,
திடீரென்று வயிற்றுப் போக்கு ஏற்படும்.
வயிற்றில்
வலியோ அல்லது வேறு தொல்லைகளோ இருக்காது.
வயிற்றுப்போக்குடன், வாந்தியும்
உண்டாகும். ‘வயிற்றுப் போக்கு’
என்றால் சாதாரணமாக
ஏற்படுவது போல் ஒரு முறை,
இருமுறை என்றெல்லாம் போகாது.
தொடர்ந்து பல முறை போய்க்
கொண்டே இருக்கும். ‘காலரா கட்டில்’
என்ற
ஒருவகை கட்டில்களிலேயே நோயாளிகளை மருத்துவ
மனையில்படுக்க வைத்திருப்பர். அந்த
கட்டிலில் மலம் கழிக்க ஏதுவாக
ஒரு ஓட்டை இருக்கும். அந்த
ஓட்டைக்கு நேர்க் கீழே,
ஒரு வாளி வைக்கப்பட்டிருக்கும்.
நோயாளி தொடர்ச்சியாக மலம் கழித்துக்
கொண்டே இருப்பார். அவை அந்த
வாளியில் விழுந்து கொண்டே இருக்கும்.
உடலிலிருந்து எவ்வளவு நீர்
வெளியேறியுள்ளது என்பதை அறியவும்
இதுஉதவும். மிகவும் தண்ணீராக
வெளியேறும். வயிற்றுப்போக்கில்,
குடல்களில் உள்ள
Mucusம்
சேர்ந்து வெளியேறும். இந்த மலம்
‘சோற்றுக் கஞ்சி’ போல் இருக்கும்.
அதனால் இதை சோற்றுக் கஞ்சி மலம்
என்றே அழைப்பர். அதிக
அளவு வயிற்றுப்போக்கால்,
உடலிலிருந்து ஏராளமான நீர் வெளியேறும், அதனால்
உடலுக்கு தேவையான ரத்த ஓட்டம்
பாதிக்கப்படும். உடலில் உள்ள நீரும்,
மற்ற சத்துப்பொருள்களும் அதிக
அளவு வெளியேறுவதால், “நீர்க்
குறைவு” அறிகுறிகள் தோன்றும்.
உடலில் உள்ள தசைகள் இறுகும், தோல்
சில்லிட்டு விடும், சுருக்கங்கள்
ஏற்படும்.
குறைவான இரத்த ஓட்டத்தால் தோல்
வெளுத்து விடும். கன்னங்கள்
குழிவிழுந்து விடும். இரத்த அழுத்தம்
குறைந்து கொண்டே வரும்.
நாடித்துடிப்பு வெகு வேகமாக
இருக்கும். சிறுநீர்
வெளியேறுவது குறைந்து கொண்டே வரும்.
இந்நிலையில் ‘நீர்க்குறைவு’
சிக்கலை சரிசெய்யாவிட்டால்,
நோயாளி மரணமடைந்து விடுவார்.

பரிசோதனை :
‘மலம்’ பரிசோதனையில்
‘விப்ரியோ’ கிருமிகளை எளிதில்
கண்டறிய முடியும். சாதாரணமாக
இக்கிருமியை அழிக்கவல்ல
உயிர்க்கொல்லி மருந்து பரிசோதனையையும்
(Anti-bioticsensitivity test)
செய்து பார்க்கலாம்.

மருத்துவம்:
நீர்க்குறைவு குறைபாட்டை உடனடியாக
சரிசெய்யவேண்டும். ‘குளுகோஸ்’
கலந்த திரவங்களையும், சோடியம்,
பொட்டாசியம் கலந்த திரவங்களையும்,
சிரைகள் மூலம் (Intra venous)
வேகமாக செலுத்த வேண்டும். கொதிக்க
வைத்த தண்ணீரைத்தான் பயன்படுத்த
வேண்டும். கொதித்து ஆறிய தண்ணீரில்
ஒரு லிட்டருக்கு இருபது கிராம்
குளுகோஸ், சமையல் உப்பு 3.5 கிராம்
பொட்டாசியம் குளோரைடு 1.5 கிராம்,
சோடியம் பைகார்பனேட் 2.5 கிராம்
கலந்து அந்த கரைசலை வாய் மூலம்
கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
நீர்க்குறைவை ஈடு செய்வது தான்
முதல் கடமையாக இருக்க வேண்டும்.
கூடவே “விப்ரியோ” கிருமிக்கு சரியான
உயிர்க்கொல்லி மருந்துகளை கொடுக்க
வேண்டும். சாதாரணமாக
“டெட்ராசைக்கிளின்”, செப்ட்ரான்
வகை மருந்துகள் பயன் உடையதாக
இருக்கும். எவ்வளவுக்கு அதிகமாக
குளுக்கோஸ் ஏற்றுகிறோமோ,
அவ்வளவு விரைவில்
நீர்க்குறைவு ஈடு செய்யப்படும்.
அதனால் பெருமளவில் மரணத்தைத்
தவிர்க்க முடியும்.
நோயுற்றவரை உடனடியாக,
தொற்று நோய் மருத்துவமனையில்
சேர்த்து மருத்துவம் பார்த்தல் அவசியம்.

வருமுன் காப்பது :
இப்பொழுது காலரா தடுப்பூசிகள்,
சுகாதாரத் துறையால்
போடப்படுகின்றன. அதை போட்டுக் கொள்ளலாம். சுத்தமான
தண்ணீரையே பயன்படுத்த வேண்டும்.
கொதிக்க வைத்தத் தண்ணீரைப்
பயன்படுத்த வேண்டியது அவசியம்.
சுற்றுப்புறத்தை சுத்தமாக
வைத்திருக்க வேண்டும். தெருக்களில்
மலம் கழித்தல் போன்ற
பழக்கங்களை முழுமையாகத் தவிர்க்க
வேண்டும். சுத்தமான, சுகாதாரமான
முறையில்
கழிப்பறைகளை வைத்திருக்க
வேண்டும். அசுத்தமான சுற்றுப்புறம்,
நோயாளியுடன் நெருக்கம்,
நோயாளி பயன்படுத்திய பொருள்கள்
ஆகியவற்றை தவிர்த்தல் மிகவும்
முக்கியம்.

தெருக்களில் அசுத்தமான
சூழ்நிலையில் தயாரிக்கப்படும்
உணவுப் பொருட்கள், ஈ மொய்த்த
பண்டங்கள் ஆகியவற்றை உண்ணாமல்
தவிர்ப்பது மிகவும் அவசியம். நோயின்
அறிகுறிகள் தெரிந்த
உடனே மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்து சென்று மருத்துவம்
செய்தால் உயிர்பலி போன்ற
ஆபத்துக்களை பெருமளவில்
தடுக்கலாம்.
நீர்க்குறைபாட்டை ஈடு செய்வது,
சரியான உயிர்க் கொல்லி மருந்துகளைக்
கொடுப்பது,
போன்றவற்றை உடனே செய்வதன்
மூலம் நோயின் வீரிய
தன்மையை பெருமளவு குறைக்கலாம்.
சுத்தமான சுற்று சூழல்,
ஆரோக்கியமான உடல்நிலை, சரியான
முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள்,
கொதிக்க வைத்த தண்ணீர், நோய் தடுப்பூசி போட்டு கொள்வது, நோயின்
ஆரம்ப நிலையிலேயே சரியான மருத்துவம் செய்தல் போன்றவை இருப்பின், காலரா வராது என்பது உறுதி!

நன்றி:
'கீற்று'- தளம்

Sunday, November 13, 2011

பிரபல தமிழ் எழுத்தாளர்களின் வலை தளங்கள்

இன்றைய சூழ்நிலையில் எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும் அடுத்த தலைமுறையினரிடம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமெனில் இணையத்தில் இணைவது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.
அந்த வகையில் பிரபலமான தமிழ் எழுத்தாளர்கள் சிலரின் வலை தளங்கள் இவை. முகவரியை சொடுக்கி தளங்களைப் பார்க்கலாம்.

அ.மார்க்ஸ்
http://amarx.org/

எஸ். ராமகிருஷ்ணன்
http://sramakrishnan.com

அறிவுமதி
http://arivumathi.wordpress.com/

மனுஷ்யபுத்திரன்
http://manushyaputhiran.uyirmmai.com/

சாரு நிவேதிதா
http://charuonline.com/blog/

கவிக்கோ அப்துல் ரகுமான்
http://kavikko.wordpress.com/

யுகபாரதி
http://yugabharathi.wordpress.com/

ஞானி
http://gnani.net.in/

ஜெயமோகன்
http://www.jeyamohan.in/

மாலன்
http://www.maalan.co.in/index.php

பிரபஞ்சன்
http://www.prapanchan.in/

மு.மேத்தா
http://www.mumetha.blogspot.com/

நாகூர் ரூமி
http://nagoorumi.wordpress.com/

பாலகுமாரன்
http://balakumaranpesukirar.blogspot.com/

பா.ராகவன்
http://www.writerpara.com/paper/

முகில்
http://www.writermugil.com/

வண்ணதாசன்
http://vannathasan.wordpress.com/

குட்டிரேவதி
http://kuttyrevathy.blogspot.com/

ஞானக்கூத்தன்
http://www.gnanakoothan.com/

டாக்டர். ருத்ரன்
http://rudhrantamil.blogspot.com/

பத்ரி சேஷாத்ரி
http://thoughtsintamil.blogspot.com/

அ.ராமசாமி
http://ramasamywritings.blogspot.com/

தேவி பாரதி
http://devibharathi.blogspot.com/

புதிய மாதவி
http://puthiyamaadhavi.blogspot.com/

டாக்டர் ஷாலினி
http://linguamadarasi.blogspot.com/

லேனா தமிழ்வாணன்
http://www.tamilvanan.com/content/

சுகுமாரன்
http://vaalnilam.blogspot.com/

விக்கிரமாதித்யன்
http://nambiraajan.blogspot.com/

நாஞ்சில்நாடன்
http://nanjilnadan.wordpress.com/

தமிழ்மகன்
http://www.tamilmagan.in/

ரவிக்குமார்
http://www.writerravikumar.com/

Friday, September 16, 2011

இனிமேலாவது கலையுமா விஜயகாந்தின் மவுனம்?

தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுக்கும் அதிரடியாக அதிமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டதன் மூலம், தேமுதிக, இடதுசாரிகளுக்கு ஒரு மேயர் பதவி கூட தரப்பட மாட்டாது என்பதைத் தெள்ளத் தெளிவாக்கிவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. அதாவது அவருடைய தற்போதைய எம்ஜியார் பாட்டு பாணியில் சொல்வதானால் 'பூனையல்ல புலிதான் என்று போகப் போகக் காட்டுகிறேன்' என்று பாடாமல் பாடி இருக்கிறார்.

இந்தப் பதவிகள் மீது கண் வைத்து இத்தனை நாட்களாக அதிமுகவை எந்த வகையிலும் விமர்சிக்காமல் இருந்து வந்த தேமுதிக தலைவர் விஜய்காந்த் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். அண்மையில் சட்டமன்றத்தில் ஜெயலலிதா 'தேமுதிகவினர் எங்களுக்கு ஒன்றும் பாலபாடம் நடத்த வேண்டாம்' எனக் கடுமையாகப் பேசியபோது கூட மவுனம் காத்தது குறிப்பிடத்தக்கது.


தேமுதிகவைப் பொறுத்தவரை மதுரை, சேலம் மாநகராட்சிகள் உள்பட 3 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளை குறி வைத்திருந்தது. அந்த இடங்களையும் முக்கிய நகராட்சிகள், பஞ்சாயத்துகளின் பதவிகளையும் கேட்டுப் பெறும் வரை அதிமுக ஆட்சியை விமர்சிப்பதோ, கேள்வி கேட்பதோ இல்லை என்ற 'கொள்கையுடன்' சட்டசபையில் செயல்பட்டது தேமுதிக. சமச்சீர் கல்வி நிலைப்பாட்டிலிருந்து அண்மையில் நடந்த துப்பாக்கி சூடு வரை இந்த 'கொள்கை'ப் பிடிப்பில் மிக கவனமாக இருந்து அதிமுகவின் குரலாகவே செயல்பட்டது. ஆனால் எப்படி கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தேமுதிகவையே கேட்காமல்
அவர்களுக்கு தொகுதிகளை ஒதுக்கி முதலில்
ஒரு லிஸ்ட் வெளியிட்டதோ, அதே ஸ்டைலில் இப்போதும் செயல்பட்டுள்ளது அதிமுக. அதாவது, 10 மேயர் பதவிகளும் எங்களுக்கே. உங்களுக்கு ஒரு இடம் கூட கிடையாது என்பதை முகத்தில் அறைந்தது போல சொல்லிவிட்டார் அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா.

திமுக மற்றும் அதிமுக அணிக்கு மாற்றாக இருப்பார் என்ற எண்ணத்திலேயே மக்கள் தேமுதிகவுக்கு வாக்களித்தனர். ஆனால் பொருப்புமிக்க பதவியான எதிர்கட்சித் தலைவராகியும் கூட இத்தனை நாட்களாக மவுனமாக இருந்தது மக்களுக்கு அதிருப்தியளித்தது. ஒரு காலத்தில் மக்களோடு மட்டுமே கூட்டணி என்று முழங்கி வந்த விஜயகாந்த் தற்போது அதிமுக கூட்டணிக்காக மக்களையே மறந்து விட்டாரோ என்று நினைக்குமளவுக்கு ஆகிவிட்டன அவருடை செயல்பாடுகள்.

இனியேனும் அவர் மவுனம் கலையுமா? அல்லது சீட்டு உடன்பாடு ஏற்பட்டு அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்காக மீண்டும் மவுனம் தொடருமா எனத் தெரியவில்லை.

ஏன்னா அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.!

Saturday, September 10, 2011

பட்டினி போட்ட எஜமானரையே இரையாக்கிக் கொண்ட நாய்கள்!

எஜமான விசுவாசம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது நாய்கள். ஆனால் அந்த நாய்களுக்கு ரோஷம் வந்து விட்டால் என்ன நடக்கும்? பின்வரும் சம்பவத்தைப் படித்துப் பாருங்கள் விளங்கும்.

இந்தோனேசியாவின் மனாடோ நகரைச் சேர்ந்த அன்ட்ரே லும் பொகா (50 வயது) ன்பவர் சுற்றுலா செல்லும் அவசரத்தில் தனது நாய்களுக்கு உணவளிக்க மறந்து சென்று விட்டார். இந்நிலையில் இரண்டு வாரங்கள் கழித்து சுற்றுலாவிலிருந்து திரும்பிய அவர் வீட்டுக் கதவைத் திறந்தவுடன், 7 நாய்களும் அவர் மீது பாய்ந்து கடித்துக்குதறி அவரை இழுத்துச் சென்று அவரது உடல் தசையை உண்ண ஆரம்பித்துள்ளன. அன்ட்ரேலும்பொகா வீடு திரும்பி 5 நாட்களாகியும் அவரது பயணப் பெட்டி வீட்டின் வாசல் கதவுக்கு வெளியே தொடர்ந்து இருப்பதைக் கவனித்து சந்தேகம் கொண்ட அவரது அயல் வீட்டுக் காவல்காரர், அந்த வீட்டிற்கு அருகில் சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து வயிற்றைக் குமட்டும் நாற்றம் வருவதை உணர்ந்த அவர், உடனடியாக காவல் நிலையத்தைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து முறையீடு செய்துள்ளார்.

அந்த வீட்டை முற்றுகையிட்ட போலீஸாருக்கு அதிர்ச்சி அன்ட்ரேலும்பொகாவின் கடித்துக் குதறப்பட்ட தலை சமையலறையிலும் உடல் வீட்டுக்கு முன்பாகவும் காணப்பட்டன. அத்துடன் ஏனைய இரு நாய்களது எலும்புக்கூடுகளும் அங்கு காணப்பட்டன. 14 நாட்களாக பட்டினியில் இருந்த நாய்கள், பசி தாங்காமல் அயல்வீடுகளின் நாய்களை கடித்து உண்டதுடன் கடைசியில் தமது எஜமானரையே தமது பசிக்கு இரையாக்கியுள்ளன.

இதனால நாம சொல்ல வரும் சேதி என்னனா..

நாய்கள் என்றால் வாலை மட்டுமே ஆட்டிக் கொண்டிருக்கும் என்று நினைக்கும் எஜமானர்களே தெரிந்து கொள்ளுங்கள். நாய்களுக்கு வால் மட்டுமல்ல வாயும் உண்டு!

வஞ்சிக்கப்பட்டால் நாய்களுக்குக் கூட ரோஷம் வருகிறது. தோழர்களே அப்படியெனில் நமக்கு?

வினோத வீடுகள் -படங்கள்

வீட்டைக் கட்டிப் பார்.. கல்யாணத்தைப் பண்ணிப் பார் என்பது நம் முன்னோர்களின் பிரபலமான பழமொழி. இல்லம், இல்லறம் இவ்விரண்டுமே நம் வாழ்க்கையின் மகிழ்ச்சியைத் தீர்மானிக்கும் முக்கிய விஷயங்கள். இவற்றை மிக கவனமாக தேர்ந்தெடுப்பது அவசியம்.

சரி இந்த அறிமுக தத்துவம் போதுமென்று நினைக்கிறேன். உங்கள் பார்வைக்கு சில வித்தியாசமான வீடுகளின் படங்களை வைக்கிறேன். பார்த்துவிட்டு சும்மா போகாம ஏதாவது கருத்து கிருத்து போட்டுட்டு போங்க..


இந்த மாதிரி வீடு கட்டினா உங்க வாழ்க்கையே தலைகீழா மாறிடும்னு ஏதாவது வாஸ்து நிபுணர் சொல்லியிருப்பாரோ..


பாலம் கட்டாம கிடப்பில் போடப்பட்ட பில்லர்களில் இது மாதிரி வீடு கட்டிக்க வேண்டியதுதான்


அடிக்கடி ஊர் மாற்றலாகிப் போனா இந்த மாதிரி வீடு வாங்கி தள்ளிட்டு போயிடலாம்.


ஏசி, பிரிஜ் எதுவும் தேவையில்லை இந்த வீட்டுக்கு


மகிழுந்து செலவு மிச்சம்!


விக்கிற விலைவாசியில இடம் வாங்கி வீடுகட்டி வீட்டுக்கொரு மரமெல்லாம் வளர்க்க முடியாது. இப்படி மரத்துக்கொரு வீடு வேணும்னா கட்டலாம்!


தியேட்டர் கவுண்டர் மாதிரி ஒரு வீடு! அதுக்கு ரெண்டு பேர் போஸ் வேறு!

வீட்டு நம்பரை எப்படி எழுதிப் போட்டாலும் நிறைய பேருக்குத் தெரிய மாட்டேங்குது.. அதான் இப்படி!



மழைக்காலத்துக்கு ரொம்ப உதவியா இருக்கும்


ஒளிக்கவோ மறைக்கவோ முடியாது. அரசியல்வாதிகளுக்கு இந்த மாதிரி வீடுதான் கொடுக்கணும்


உலகின் விலையுயர்ந்த முகேஷ்
அம்பானியின் வீடு

எந்த செலவுமில்லாத வீடு.
வானமே கூரை! பூமியே தரை!

கோடிகள் புரளும்
அம்பானியும் தெருக்
கோடியில் உருளும் அப்பாவிகளும்
இருப்பது ஒரே இந்தியாவில்தான்!
என்ன கொடுமை..!

Thursday, September 8, 2011

வாகன உரிமையாளர் பெயரைக் கண்டுபிடிக்க

திருட்டு வாகனமா? சில விநாடிகளில்
கண்டுபிடிக்கலாம்!

ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக்
கொண்டு, அதன் உரிமையாளர்
பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம்.
மத்திய அரசால் சமீபத்தில்
கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், சட்ட
விரோதமாகப் பயன்படுத்தப்படும்
வாகனங்களை உடனே அடையாளம்
கண்டுகொள்ள உதவும்.

092123 57123 என்ற
எண்ணுக்கு vahan>space<பதி
வு எண்- வாகனத்தின்
பதிவு எண்ணை இடைவெளியின்றி டைப்
செய்து அனுப்பினால், அடுத்த
விநாடியே வாகன உரிமையாளரின்
பெயர், வாகனத்தின் வகை,
வரி செலுத்திய விபரம், தகுதிச்
சான்று முடிவடையும் தேதி ஆகிய
விபரங்கள் தாங்கிய எஸ்எம்எஸ்
வந்துவிடும்.

இந்த வசதி 2003-ம் ஆண்டுக்குப்
பிறகு பதிவு செய்யப்பட்ட
வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
அல்லது 2003-ம் ஆண்டுக்குப்
பிறகு ஏதாவது ஒரு காரணத்துக்காக
வட்டாரப்
போக்குவரத்து அலுவலகத்துக்கு வாகனம்
சென்றிருக்க வேண்டும்.

Tuesday, September 6, 2011

எங்கே இருக்கின்றீர்கள் நண்பர்களே?

ஏனோ தெரியவில்லை இப்பொழுதெல்லாம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. பழைய நினைவுகளை மனம் அசை போட்டு ஆனந்தப்படுகிறது. மலைச் சாலையில் பயணிக்கும் போது கீழே எட்டிப் பார்த்து ரம்மியமாக ரசிப்பதைப் போல.

இப்படியான ஒரு நினைவுத் தேடலில் பரண் மேல் இருந்த பழைய புத்தக மூட்டையை தூசு தட்டிப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது 1998ம் வருட நாட்குறிப்பு (Dairy) கண்ணில் சிக்கியது. அப்போதெல்லாம் எனக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இருந்தது. யாருக்கும் புரியாத கிறுக்கலான கையெழுத்தில் (தற்போது எனக்கே புரியவில்லை என்பது வேறு விஷயம்) எழுதுவேன். சென்னை என்ற எந்திரலோகம் வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அப்பழக்கம் கைவிட்டுப் போனது. ஆனால் நாட்குறிப்பு எழுதுவதின் அருமை பின்னாளில் புரட்டிப் பார்க்கும் போதுதான் தெரிகிறது.

1998 என்பது நான் ஐடிஐயில் படித்துக் கொண்டிருந்த காலம். நாட்குறிப்பின் பக்கங்களைப் புரட்டப் புரட்ட என் நினைவுகளை விட்டு அகன்று போன பல்வேறு விஷயங்களும் காட்சிகளாக மனத் திரையில் விரிந்தது.

காலத்தின் சுழற்சியில் நண்பர்களையெல்லாம் நான் மறந்து விடுவேன் என்று அப்போதே நினைத்திருந்திருந்தேனோ என்னவோ எங்கள் பிரிவில் படித்த 25 நண்பர்களின் பெயர்களையும் அவர்களின் ஊர்களையும் கடைசி பக்கத்தில் எழுதி வைத்திருந்திருக்கிறேன். ஒவ்வொரு பெயரையும் உச்சரித்தபோது அவர்களோடு கழிந்த வசந்த பொழுதுகள் நினைவில் நிழலாடியது.

காலம்தான் எத்தனை விசித்திரமானது! பிரியவே கூடாது, முடியவே கூடாது என்று நினைத்துப் பழகிய எத்தனை நட்புகளை நம்மிடமிருந்து லாவகமாகப் பிரித்து விட்டுருக்கிறது! ஒருவேளை இந்தப் பதிவை என் நண்பர்களோ அல்லது அவர்களோடு தொடர்புடையவர்கள் கண்டால் மீண்டும் அந்த வசந்த நினைவுகளை மீட்டெடுக்கலாம் என்ற நப்பாசையோடு அந்த 25 நண்பர்களின் பெயர்களையும் ஊர்களையும் இங்கே பதிவிடுகிறேன். இவர்களில் சிவப்பு நிறத்தில் குறிப்பிடப்பட்ட நான்கு பேர் மட்டும் என்னுடன் ஒரே நிறுவனத்தில் பணியிலிருப்பதால் தொடர்பில் இருக்கிறார்கள்

1.அகிலன்
புளியங்கொட்டாரம்.

2.ஜான் கிளிட்டஸ்
தக்கலை,குமரி மாவட்டம்.

3.ஹமீது உசேன்
தாழையூத்து.

4.S.முத்து
ராமானுஜம்புதூர்

5.E.முத்துக்குமார்
V.M.சத்திரம்,பாளை.

6.ஜெயராஜ்,
கருங்குளம்.

7.சையது அலி
மூலக்கரைப்பட்டி.

8.R.காளிராஜ்
திருமலாபுரம்,கடம்பூர்.

9.சுப்ரமணியன்
தியாகராஜநகர், பாளை.

10.சந்திரமோகன்
சங்கரன்கோவில்

11.சோழ பாண்டிய ராஜா
பாளையங்கோட்டை.

12.இராஜ்குமார்
சுத்தமல்லி.

13.சதீஷ் குமார்
தி.நகர், பாளை.

14.பத்மநாபன்
சங்கர் நகர்.


15.ராஜதுரை
பாளையங்கோட்டை

16.லிங்க ராஜா
சிவந்திபுரம்.

17.பிரம்மநாயகம்
விக்கிரமசிங்கபுரம்


18.சுடர் ஒளிவு
பாவூர்சத்திரம்

19.சுந்தர் ராஜ்
பட்டக்காடு

20.சண்முகலிங்கம்
இலத்தூர்.


21.கணேசமூர்த்தி
கோவில்பட்டி


22.ஐயப்பன்
பழைய பேட்டை

23.இசக்கிப் பாண்டியன்
வள்ளியூர்

24.சுபாஷ்
நாகர்கோவில்

25.சுரேஷ்
மாயமான்குறிச்சி.


ஒரு மிகப்பெரும் பிரிவை நாம் சந்திக்க இருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் ஐடிஐயின் கடைசி நாளில் புன்னகையோடு விடைபெற்றுக் கொண்ட அந்த முகங்களை நினைத்த போது விழிகளில் தேங்கிய நீருக்கு அணை போட முடியவில்லை!

Tuesday, August 23, 2011

நெடுஞ்சாலை உணவகங்களில் நடக்கும் வழிப்பறிக் கொள்ளை!

அநேகமாக அரசு விரைவுப் பேருந்துகளில் வெளியூர்ப் பயணம் சென்று வரும் அனைவருமே அனுபவப்பட்ட விஷயம்தான் இது. என்றாலும் என் வயிற்றெரிச்சலை வார்த்தைகளாகக் கொட்டித் தீர்க்காமல் இருக்க முடியவில்லை.

பேருந்தில் இடம் கிடைப்பதே பெரும்பாடாய் இருக்கும் நேரத்தில் அடித்து பிடித்து இருக்கையில் உட்கார்ந்த பிறகுதான் உணவு ஞாபகம் வரும். சரி போகிற வழியில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தால் அங்கேதான் ஆரம்பிக்கிறது வினை.

நகர நெருக்கடிகளையெல்லாம் கடந்து காட்டுப் பகுதில் இருக்கும் உணவகத்தில் நிறுத்தப்படுகிறது பேருந்து. அங்கே ஒரு குரல் 'சார் வண்டி பத்து நிமிஷத்துக்கு மேல நிற்கும் டீ காபி டிபன் சாப்பிடறவங்க சாப்பிடலாம் சார்' ஏதோ பதிவு செய்யப்பட்ட குரல் போல ஒவ்வொரு பேருந்து நிறுத்தப்படும் போதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

வேகமாக உணவகத்திற்கு உள்ளே நுழைந்து ஏதாவது சாப்பிடலாம் என்று விலையைக் கேட்டால் நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது. நட்சத்திர உணவகங்களில் கூட கேள்விப்படாத விலை. சரி தொலைகிறது என்று அமர்ந்தால் நாம் சாப்பிட வேண்டியதையும் அவர்களே தீர்மானிக்கிறார்கள். சாதாரண தோசை வாங்கினாலும் சட்னி சாம்பாரெல்லாம் எதிர்பார்க்க முடியாது. அசைவ குருமாக்கள்தான் இருக்கிறதென்று எதையோ ஊற்றுவார்கள். சைவம் சாப்பிடுவோர் நிலை பரிதாபம்தான்!

சரி சாப்பிட வேண்டாம் வேறு ஏதாவது வாங்கலாம் என்று வெளியே வந்தால் குளிர் பானங்கள், பிஸ்கட்டுகள், நொருக்குத் தீனிகள் என்று எதை வாங்கினாலும் நிர்ணயிக்கப்பட்ட MRP விலையைக் காட்டிலும் 50 சதவீத்திற்கு மேல் விலை. 10 ரூபாய் பிஸ்கட் 15 ரூபாய். 15 ரூபாய் குளிர்பானத்தின் விலை 25 ரூபாய். இவற்றில் பலவும் போலியான தயாரிப்புக்கள். சரி டீ காபியாவது குடிக்கலாம் என்று நினைத்தால் அதற்கு 10 ரூபாயை வாரி வழங்க வேண்டும். அப்படியே குடித்தாலும் அதற்கு வெந்நீரே தேவலை என்று நினைக்கத் தோன்றும்.

இருக்கும் வயிற்றெரிச்சலையெல்லாம் அணைத்துக் கொள்ளலாம் என்று தண்ணீர் பாக்கட் விலையைக் கேட்டால் ஒரு பாக்கட் 3 ரூபாய்! அது தண்ணீரா அல்லது பெட்ரோலா என்று சந்தேகம் வந்து விடும். எனக்குத் தெரிந்த வரை விலை அதிகம் கொடுத்தாலும் அங்கே தரமாகக் கிடைக்கும் ஒரே பானம் இளநீர் மட்டுமே. மற்ற அனைத்துமே ஏதோ கொஞ்சம் சுவையுடைய சாக்கடைக்கு சமமானவையே.

எதுவுமே வேண்டாம் சிறுநீர் பாரத்தையாவது இறக்கித் தொலைக்கலாம் என்று கழிவறை நோக்கி நடந்தால் அங்கேயும் அதிர்ச்சி காத்திருக்கும். சிறுநீர் கழிக்க 3 ரூபாயாம். வேறு வழியின்றி உள்ளே நுழைந்தால் நீங்கள் வியாதிகளை விலை கொடுத்து வாங்கப் போகிறீர்கள் என்று பொருள். அவ்வளவு சுத்தம்.. சுகாதாரம்.! சரி வெளியில் சாலையோரமாக நின்று வெளியேற்றலாம் என்று நினைத்து நடந்தால் வேகமாக வரும் விசில் சத்தம் நம்மைத் தடுக்கும். இதற்காகவே பிரத்தியேகமாக ஆட்களை நியமித்திருப்பார்கள்.

இப்படி சொல்லி மாளாத அவலங்கள் இன்னும் நிறைய உண்டு. நெடுஞ்சாலைகளில் சில நல்ல உணவகங்களும் இருக்கின்றன. ஆனால் அங்கெல்லாம் பேருந்துகள் குறிப்பாக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படுவதில்லை. இது போன்ற கழிசடை உணவகங்களில் நிறுத்தப்படுவதற்குக் காரணம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்குக் கிடைக்கும் சிறப்பு கவனிப்பு. ஒரு பேருந்து நிறைய ஏமாளிகளைக் கொண்டு வந்ததற்காக அவர்களுக்குக் கிடைக்கும் உபசரிப்பே தனிதான். அவர்களுக்கு வரவேற்பு என்ன? சிறப்பு உணவு என்ன? கடைகளில் வேண்டியதை எடுத்துக் கொள்ளும் உரிமை என்ன? அடடா.. ராஜ மரியாதை என்று சொல்வார்களே அதை நேரில் பார்க்கலாம்!

இப்படி நடுத்தர வர்க்கத்தினரிடம் பகல் கொள்ளை நடத்தும் இந்த உணவகங்களை சம்பத்தப்பட்ட அரசு அதிகாரிகள் ஏன் கண்டு கொள்வதில்லை? எந்த ஆட்சி மாறினாலும் இந்த காட்சி மாறாமல் தொடர்வது ஏன்? மக்கள் தங்களுக்குள் புலம்பிக் கொள்வதில் சில உண்மைகள் புலப்படுகின்றன. எப்படி ஓட்டுனர்களையும் நடத்துனர்களையும் இவர்கள் கவனித்து விடுகிறார்களோ அதே போல் மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டம் வரை கவனித்து விடுவார்களாம். பெரும்பாலும் இதுபோன்ற உணவகங்கள் ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளிகள் கைவசம்தான் இருக்குமாம்.

எது எப்படியோ, ஒரு காலத்தில் பயணிகளுக்காக மரங்களை வளர்த்து சத்திரங்கள் கட்டி இலவசமாகவோ அல்லது மலிவாகவோ உணவு வழங்கிய பெருமைமிகு வரலாறு கொண்ட தமிழக சாலைகள் இன்று இது போன்ற வழிப்பறிக் கொள்ளையர்களிடம் சிக்கிக் கிடப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

Tuesday, August 9, 2011

ஜெ. வாங்கிய முதல் குட்டு!

கடந்த மூன்று மாதங்களாகக் கேள்விக்குறியாக மாணவர்களையும் பெற்றோர்களையும் கவலையில் ஆழ்த்திய சமச்சீர் கல்விக்கு ஒரு வழியாக முற்றுப் புள்ளி வைத்தது உச்சநீதிமன்றம். இன்னும் 10 நாட்களில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் எனக்கூறி தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது.

கடந்த கால திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட கடும் அதிருப்தியால் ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா அம்மையாருக்கு விழுந்த முதல் குட்டு இதுவாகத்தான் இருக்கும்.

சமச்சீர் கல்வி தொடர்பாக தமிழக அரசின் நிலைபாட்டை நடுநிலையாளர்கள் பலரும் ஆட்சேபித்திருந்தும் உயர்நீதி மன்றத்தில் ஏற்கனவே குட்டு வாங்கியும் அம்மையார் தன்னுடைய வழக்கமான பிடிவாதத்தால் உச்சநீதி மன்றத்தில் குட்டுப் பட்டு திரும்பியுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் நேற்றைய சட்டமன்றக் கூட்டத்தில் உச்சநீதித் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அமல் படுத்துவோம் என்று கூறியிருக்கிறார். அப்படியென்றால் உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கூட புறக்கணிக்கலாம் என்ற முடிவில் ஏற்கனவே இருந்தாரோ என்னவோ புரியவில்லை!

கெட்டதிலும் நல்லது என்பதைப்போல வகுப்புகளில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப் படவில்லையே தவிர, அரசியலையும் போராட்டத்தையும் மாணவர்கள் நன்றாகவே கற்றுக் கொண்டிருக்கிறார்கள்!

ஏற்கனவே வாரி வழங்கிய இலவச வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கே பல கோடிகள் கடன்பட்டிருக்கும் ஜெ. அரசு இப்படி வீண் பிடிவாத்தால் படிக்காத புத்தகங்களுக்காக பலகோடி பணத்தை வீணடித்தது எவ்விதத்தில் நியாயம்?

இங்கே இன்னொருவரைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். அவர் எதிர்கட்சித் தலைவர் திரு. விஜயகாந்த். சிலர் விமர்சிப்பது போல் அவர் தூங்கிக் கொண்டிருக்கிறாரா அல்லது தூங்கிக் கொண்டிருப்பது போல் நடித்துக் கொண்டிருக்கிறாரா என்றே நினைக்கத் தோன்றுகிறது. இனிமேலாவது விழித்துக் கொண்டு பொருப்புடன் செயல்படாவிட்டால் அவருடைய வருங்கால முதல்வர் கனவு சாத்தியமாக வாய்ப்பில்லை.

சமச்சீர் கல்வி தீர்ப்பு மூலம் அரசு பாடம் கற்றிருக்க வேண்டும். இனியேனும் மக்களின் நியாயமான உணர்வுகளை மதித்து ஆட்சி நடத்த வேண்டும். இல்லை இனிமேலும் நாங்கள் இதுபோன்ற விஷயங்களில் உச்சநீதிமன்றத் தீரப்புக்குப் பிறகே திருந்துவோம் என்று அரசு எண்ணினால் மக்கள் தீர்ப்பு வேறு மாதிரியாக இருக்கும்!

Thursday, July 28, 2011

வாய்ப்பு-கவிதை

இந்த வார ராணி முத்து இதழில் பிரசுரமான என் கவிதை இது..

=>வாய்ப்பு<=

அதிகம் பேசியதால்

மவுனமானோம் நாம்..

நீயாகப் பேசுவாய் என்று நானும்

நானாகப் பேசுவேன் என்று நீயும்

காத்திருக்கிறோம்!

எப்படியும் வராமலா போய்விடும்

ஒரு மகிழ்ச்சியோ துக்கமோ

நம் மவுனத்தைக் கலைப்பதற்கு?

Friday, June 17, 2011

திகைப்பூட்டும் புகைப்படங்கள்

கின்னஸ் சாதனையாளர் சிலரின் திகைப்பூட்டும் புகைப்படங்கள் இவை

நீளமான இமை முடி

நீண்ட கழுத்து

மிக குண்டானவர்

மிக குள்ளமானவர்

மிக உயரமானவர்

நீண்ட தாடி

பெரிய கண்கள்

மிக அதிகமாக நீட்சியடையும் தோல்

மிகப்பெரிய தாடை

நீண்ட நகங்கள்

Tuesday, June 14, 2011

இணைபிரியா வாழ்க்கை

கடவுள் நமக்கு எத்தகைய சிறந்த வாழ்க்கையை அளித்திருக்கிறார் என்பது பலருக்கு புரிவதில்லை. ஏதோ தனக்கு மட்டும் வாழ்க்கையில் யாருக்கும் நேர்ந்திடாத துன்பம் நேர்ந்துவிட்டதாகப் புலம்பும் நண்பர்ளே, பின்வரும் படங்களைப் பாருங்கள். நம்மால் கற்பனையிலும் நினைக்க முடியாத வாழ்க்கையை எப்படி புன்னகையோடு எதிர்கொண்டு வாழ்கிறார்கள் என்பதைப் பாருங்கள்!

Wednesday, June 8, 2011

கோளுரை

மதியை மதித்தவன்
வானத்தில் ஏறி
மதியை மிதித்து வந்தான் - தலை
விதியை நம்பி
விழுந்தவனே! நீ
விழுந்தே கிடக்கின்றாய்

வெற்றி எழுத்தாய்
வியர்வையைக் கொண்டவன்
விதியை எழுதுகிறான் - பொய்
நெற்றி எழுத்தை
நம்பியவன் நீ
நீரில் எழுத்தானாய்

கைகளில்தான் உன்
வருங்காலம் அது
கைகளின் சக்தியிலே - வெறும்
பொய்களின் வழியில்
போனவனே! அதை
ரேகையில் தேடுகிறாய்

கோளும் நாளும்
குறித்தது ராமன்
கொற்றவன் ஆவதற்கு - அந்த
நாளில் என்ன
நடந்தது? பாவம்
நடந்தான் காட்டுக்கு

காலம் பார்த்து
நடந்ததுதானே
கண்ணகி கல்யாணம் - அவள்
கோலம் இழந்து
கொண்டதுவோ மலர்க்
குங்கும அலங்கோலம்

சாதகம் பார்த்தாய்
சகுனம் பார்த்தாய்
சகலமும் பார்த்தாயே - ஒரு
பாதகம் இன்றி
வாழ்ந்தாயா? வெறும்
பயத்தால் சாகின்றாய்

அழுவது சில நாள்
சிரிப்பது சில நாள்
அனைவர்க்கும் உள்ளதுதான் - கதை
முழுவதும் உனக்கு
முன்னால் தெரிந்தால்
மூச்சில் சுவை ஏது?

-கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய "சுட்டுவிரல்" எனும் நூலிருந்து.

Wednesday, May 25, 2011

கருங்காலி

கருங்காலி என்ற வார்த்தையைக் கேட்டவுடன் காட்டிக் கொடுக்கும் கயவர்கள், கூட இருந்து குழி பறிப்போர், நம்பிக்கை துரோகிகள் இதெல்லாம் நம் நினைவுக்கு வரும். கருங்காலி என்ற பெயர் எப்படி வந்தது என்பது குறித்த ஒரு சிறு ஆய்வு

கருங்காலி என்பது ஆசிய நாடுகளில் அதிகமாக காணப்படும் ஒரு வகை மரம்.

கருங்காலி மரம்

இம்மரத்திலிருந்து பெறப்படும் கட்டைகள் மிக உறுதி மிக்கவை. கருப்பு நிறமுடைய இக்கட்டைகள் பல்வேறு பொருட்கள் செய்ய பயன்படுகின்றன. இது மட்டுமின்றி கருங்காலி மரத்தின் வேர், பட்டை, பிசின் போன்றவைகளிருத்து மருந்துப் பொருட்களும் தயார் செய்யப் படுகின்றன.

கருங்காலி மர இலைகள்

அதெல்லாம் சரிதான். இவ்வளவு சிறப்புமிக்க கருங்காலி எப்படி துரோகிகளுக்கு அடைமொழியானது என்று கேட்கிறீர்களா?

மரங்களை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் கோடரி இருக்கிறதல்லவா? அதன் கைப்பிடி உறுதியாக இருப்பதற்காக பெரும்பாலும் இந்த கருங்காலி மரக் கட்டைதான் பயன்படுத்தப்படுகிறதாம். அதாவது தன் இனத்தை அழிப்பதற்கு தானே காரணமாக அமைகிறதாம் இந்த கருங்காலி. இதனால்தான் துரோகிகளுக்கும் இப்பெயர் கூறும் வழக்கம் வந்ததாம்.

காலங்காலமாக இந்த யூதாஸ்களும் எட்டப்பர்களும் தலையெடுத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். இதற்கு என்னதான் காரணம்?
கீழேயுள்ள படத்தைப் பார்த்தால் உங்களுக்கே புரியும்.

கருங்காலியில் செய்யப்ட்ட நாற்காலி

கருங்காலியில் செய்யப்பட்ட கல்லாப் பெட்டி

ஆம்.. நீங்கள் யூகிப்பது சரிதான்!
பதவி பணம் இவைகளுக்காத்தான் சில போராளிகள் கூட கருங்காலிகளாக மாறுகின்றனர்.

Tuesday, May 24, 2011

பிற மாநில சட்டப் பேரவைக் கட்டிடங்கள்

ஆட்சியைப் பிடித்ததும் ஜெயலலிதா அம்மையாரின் முதல் அதிரடியாக, கலைஞர் பலகோடி செலவில் பார்த்து பார்த்து கட்டிய சட்டப் பேரவையை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றினார். அது சரியா தவறா என்ற ஆய்வுக்கு போவதற்கு முன்னால் இந்தியாவின் பிற மாநிலங்களிலுள்ள சட்டப்பேரவைக் கட்டிடங்களைப் பார்க்கலாம்.

கேரளா

குஜராத்

உத்திரப் பிரதேசம்

கர்நாடகா

மகாராஷ்டிரா

மேற்கு வங்கம்

ராஜஸ்தான்

மத்தியப் பிரதேசம்

ஆந்திரா

ஒரிஸ்ஸா

பீஹார்

சட்டீஸ்கர்

அஸ்ஸாம்

இமாச்சலப் பிரதேசம்

இயற்கை எழில்மிக்க இமாச்சல பிரதேசப் பேரவையைப் போல நம்ம தமிழ்நாட்டுப் பேரவையை குளு குளுன்னு இருக்குற கொடநாட்டுக்கு மாத்திட்டா என்ன?