Wednesday, July 14, 2010

தமிழ்ப் பத்திரிக்கைகளையும் பாருங்கள் முதல்வர் அவர்களே!

மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் வெளியாகும் 'தி வால் ஸ்ட்ரீட் ஜெர்னல்' என்ற நாளிதழ் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பற்றியும் அதற்காக தமிழக அரசு காட்டி வரும் அக்கறை பற்றியும் சிலாகித்து எழுதியுள்ளதாக மேற்கோள் காட்டியுள்ளார்.



 டெட்ராய்டை போல சென்னை உள்ளது. பல சர்வதேச கார் உற்பத்தி நிறுவனங்களும்,விநியோக நிறுவனங்களும் அவர்களது தொழிற்சாலைகளை நிறுவியுள்ளதால் 50 லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்த பெருநகரம் செழித்து வருகிறது. போர்டு, ஹூண்டாய், நிஸான், ரெனோ, டெய்ம்லர், பி.எம். டபிள்யூ ஆகிய அனைத்து நிறுவனங்களும்இங்கு சங்கமித்துள்ளன.

 உலகின் சிறிய கார்களை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய மையமாக சென்னையை உருவாக்க பல நூறு கோடி டாலர்களைச் செலவழித்து வருகின்றனர். விரைவில் சென்னை ஆண்டுக்கு 15 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும். இது கடந்த ஆண்டு எந்தஅமெரிக்க மாநிலமும் செய்த உற்பத்திஅளவை விட அதிகமாகும்.கார் உதிரி பாகங்களின் விநியோக  நிறுவனங்களும் இங்கு முதலீடு செய்து வருகின்றன.



கார் தொழிலுக்கு தேவையான நிலம், சாலைகள், மின்சாரம்ஆகியவற்றை அளிப்பதில் இந்தியாவின் பல மாநிலங்களை விட தமிழ்நாடு சிறப்பாக உள்ளது. ஒரு தொழிற்சாலையை ஆரம்பிக்கவும், அல்லது தொழிலை விரிவாக்கம் செய்யவும்  டஜன் கணக்கான அரசு அனுமதிகளை பெற ஒரே அலுவலகத்தையும் (ஒற்றை சாளர முறை) தமிழ்நாடு அமைத்துள்ளது.

இவ்வாறு அந்த இதழில் செய்தி வந்துள்ளதாகப் பெறுமையாக குறிப்பிடும் முதல்வர் அவர்கள் தமிழகத்தில் வெளிவரும் பத்திரிக்கைகளையும் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் நன்றாக இருக்கும்.

சான்றுக்கு ஆனந்த விகடனில் 'அரசு உஷார்!' என்ற தலைப்பில் வெளியான தலையங்கம் இதோ,

'அமைதிப் பூங்கா' என்றும், 'தொழிலாளர் உறவில் தனிச் சிறப்பு பெற்ற மாநிலம்' என்றும் தமிழகம் சம்பாதித்த நற்பெயர்களும் அடுத்தடுத்து பாதிக்கப்படுகின்றன.

சில காலம் முன்புதான் கோவை தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளர்களே அதிகாரியை அடித்துக் கொன்ற கோரச் சம்பவம் அரங்கேறியது. சென்னையை அடுத்திருக்கும் கார் தொழிற்சாலையின் உள்ளே போலீஸார் புகுந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய அளவுக்கு வேலை நிறுத்தம்.

உலகமே திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன், ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் கோவை பக்கம் திருப்பி, செம்மொழி மாநாடு கொண்டாடுவதில் திறமை காட்டிய அரசு இது. இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் விழா முதல் பல்கலைக்கழகப் பட்டமளிபபு விழா வரையில் ஆள்வோர் கலந்துகொண்டால், பிரமாண்டமான கூட்டம் கூட்டுவதிலும் வல்லமை கொண்ட அரசு இது.

திரைத் துறை விழாக்கள் சீரும் சிறப்புமாக நடப்பதற்காக எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் செலவிட முதல்வரே துடிப்புடன் தயாராக இருக்கும் அரசு இது. மத்திய அரசில் கூட்டணியாக இருந்துகொண்டு தாங்கள் இஷ்டப்பட்டதையெல்லாம் சாதிக்கும் சாமர்த்தியம் கொண்ட அரசு இது.

மேற்சொன்ன அவலங்களுக்கு முடிவுகட்டவும், கொஞ்சம் நேரத்தையும் சாதுர்யத்தையும் பயன்படுத்தினால்தான் என்ன?
நன்றி: ஆனந்த விகடன்14.7.10

கூடுதராக இன்னொரு தகவல்:
சென்னையை அடுத்துள்ள நோக்கியா நிறுவனத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேற்று(13.7.10) முதல் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பன்னாட்டு நிறுவங்களுக்கும் முதலாளிகளுக்கும் ஏதுவாக இருக்கும் தமிழகத்தில் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் நிலைமையைப் பற்றியும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுமா அரசு?

5 comments:

  1. பாராட்டு விழாக்கள் நடத்துவதற்கே இவர்களுக்கு நேரம் இல்லை... நீங்க வேறெ எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுகிறீர்களே இது நியாயமா?

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு நன்றி manjoorraja, தமிழ் யாளி

    ReplyDelete
  3. அப்ப அடுத்த பாராட்டு விழா அமெரிக்காவுலயா?

    ReplyDelete
  4. @மக்கள் தளபதி,
    //அப்ப அடுத்த பாராட்டு விழா அமெரிக்காவுலயா?//
    இருந்தாலும் இருக்கலாம் வியப்பதற்கொன்றும் இல்லை!

    தங்கள் வரவுக்கு நன்றி

    ReplyDelete