வாங்கியத தீர்க்கல
அடகுக் கடையில்
வச்சதயும் திருப்பல
சொத்து பத்து
இருந்ததெல்லாம் இப்பயில்ல
சொந்தங்கொள்ள காணி
நிலங்கூட இல்ல
சொந்தபந்தம்
இருக்குறாங்க தூரத்தில
சொல்லிக்கொள்ள பக்கத்தில
யாருமில்ல
அஞ்சு பத்து வச்சிருந்த
காசையும்
அடிச்சு வாங்கி புடுங்கி
போன புருஷனோ
எக்கச்சக்கம் குடிச்சதால
போதையில
எழுந்திருக்க முடியாம
வீதியில
கொஞ்சநஞ்சம் மிஞ்சிருந்த
உசுரு கூட
குடி கொள்ள முடியாம
முடிஞ்சு போக
அங்கயிங்க அலஞ்சி திரிஞ்சி
அழுதழுது வாங்கி வந்த
பணத்துல
மிச்சமீதி
சடங்குக்கொண்ணும் குறையில்ல
மிஞ்சியிருந்த அரிசி கூட
புருசன் வாயில.!
Tweet | ||||||
நன்று!!!!!! மீரான்.. நிறயமனிதர்களின் வாழ்க்கை இப்படித்தான் பயனிக்கின்றது......
ReplyDeleteஉண்மைதான் நண்பர் ராஜா அவர்களே..
ReplyDeleteநட்புடன் வருகை தந்தமைக்கு நன்றி!