Saturday, July 24, 2010

மலிவு விலையில் மடிகணினி

தி.மு.க.வின் அடுத்த தேர்தல் வாக்குறுதி 'அனைவருக்கும் இலவச மடிகணினி' என்பதாகக் கூட இருக்கலாம்! ரூ.1500க்கு லேப்டாப் விற்பனைக்கு வந்தால் இது சாத்தியம்தானே? ஆம், விரைவில் வருகிறது 1500ரூபாய்க்கு லேப்டாப்!

மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் வெறும் ரூ.1500 விலையில் லேப்டாப் கம்ப்யூட்டரை மத்திய  அரசுஅறிமுகம் செய்துள்ளது. அடுத்தாண்டுமுதல் இது விற்பனைக்கு வரும். புதுடெல்லியில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த லேப்டாப்பை வடிவமைத்துள்ளது. இத்துறையின் அமைச்சர் கபில் சிபல்இதை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:

இது போன்ற மலிவு விலை லேப்டாப்பை வடிவமைக்கும் திட்டத்தை ஆரம்பித்தபோது,தனியார் நிறுவனங்கள் யாரும் ஆர்வம்காட்டவில்லை. இப்போது அத்தனை பெரிய நிறுவனங்களும் மலிவு விலை லேப்டாப் தயாரிப்பில் ஆர்வம் காட்டுகின்றன. பெரிய தனியார் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் இவற்றை தயாரிக்கும்போது, விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

இந்த லேப்டாப்பில் டச் ஸ்கிரீன், கீபோர்டு, 2 ஜி.பி. ராம் மெமரி, வை&பி இணைப்பு வசதி, யூஎஸ்பி போர்ட் ஆகியவை இருக்கும். அடுத்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு இவை விநியோகம் செய்யப்படும்என கபில் சிபல் தெரிவித்தார். ஆரம்பத்தில் ரூ.500 விலையில் லேப்டாப் கம்ப்யூட்டரை தயாரிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் இப்போது ரூ.1500 ஆகிவிட்டது. இன்னும் படிப்படியாக விலை குறையவும் வாய்ப்புள்ளதாம்.

No comments:

Post a Comment