இருவிரல் இணையும்
நுனிமட்டும் சிவக்கும்
இறுதியில் உன் வாழ்க்கை
ஒருபிடிச் சாம்பல்
ஓதாமல் ஊதும்-சங்கு
ஊதாமல் ஊதும்
புகைத்தல்
உனது புன்னகைக்கு
மட்டுமல்ல-பூக்களுக்கு
செய்யும் துரோகமும் கூட
ஒவ்வொரு இழுப்பின் முடிவிலும்
உனக்கு மட்டும் அல்ல
காற்றுக்கும் சேர்த்துதான்
கல்லறை
கட்டிக்கொண்டிருக்கிறாய்
காற்றால் நிரப்ப வேண்டிய
நுரையீரலுக்குள் ஏன்
கரையான் கூடு கட்டிக்
கொள்கிறாய்.
இயற்கையைப் பிடுங்கி
இயற்கையைக் கொன்று
இன்பம் காண்கிறாயா?
தன்னுயிர் நீக்க தனக்கு
உரிமை இல்லாதபோது
காற்றின் குரல்வளை
நெறிக்க
உனக்கேது உரிமை.
இனி..
புகைத்தலும் தேச துரோகமே!
சுயகொள்ளி போட்டுக்கொள்வதில்
இனியும் சுகப்படாதே..
அமுதுண்ட அதரங்களில்
அமில
உருளைகளை
அணியாதே!
புகைத்தலை மற
புன்னகை திற
கனவுகள் தெளிவாகட்டும்
கார்மேகம் உனக்காக
பொழியட்டும்.!
-மா.ஜெகதீஷ் எழுதிய "அமைதியை நாடி"புத்தகத்திலிருந்து..
--------------------------------------------------------------
Ovi Mail: Create an account directly from your phone
http://mail.ovi.com
Tweet | ||||||
No comments:
Post a Comment