Thursday, January 28, 2010

ஹைதி நிலநடுக்கம்

13.01.2010 அன்றைய தினம் அவ்வளவு சோகமயமாகும் என்று ஹைதி(Haiti) நாட்டு மக்கள் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். தங்கள் நாட்டு ஜனத்தொகையில் 2% மக்களை ஒரே நாளில் பூகம்பத்திற்கு இரையாக்கியது பரிதாபம்! ஏறத்தாழ 2லட்சம் பேர்களை பலி கொண்ட இது உலகில் நடந்த மிகப்பெறும் பூகம்பங்களில் ஒன்றாகும். பூகம்பத்திற்கு முன்பு ஹைதி என்றொரு நாடு இருப்பதே நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மத்திய அமெரிக்கா பகுதியில் உள்ள இந்நாடு 27750ச.கீ பரப்பளவு (தமிழ்நாட்டில் 6ல் ஒரு பங்கு) கொண்ட குட்டி நாடாகும். 2008ம் ஆண்டு பக்கத்து நாடான டொமினிக் குடியரசில் நடந்த விஞ்ஞானிகள் கருத்தரங்கில் விரைவில் இப்பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படுமென கணிக்கப்பட்டது. பூகம்பத்தை பொருத்தவரை எந்த பகுதியில் வரும் என்பதை மட்டுமே கணிக்க முடியும். எந்த நேரத்தில் வரும் என்பதை துல்லியமாக கணிக்க இயலாது. இதற்கு முன்பும் ஹைதி மற்றும் அண்டை நாடுகளில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் உலகில் நடந்த பெரிய பூகம்பங்களும் பலியானோர் ண்ணிக்கையும்:
1. 1556-சீனாவிலுள்ள Shaanxi, 830,000 பேர்

2. 526 துருக்கியின் Antioch, 250,000 பேர்

3. 1976 சீனாவின் Tangshan, 242,000

4. 1920 சீனாவின் Haiyuan, 240,000

5. 1138 சிரியாவிலுள்ள Aleppo, 230,000

6. 2004ல் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியில் இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளில் 230,000பேர்.

இந்த வரிசையில் ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஏழாம் இடத்தில் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment