Saturday, September 10, 2011

பட்டினி போட்ட எஜமானரையே இரையாக்கிக் கொண்ட நாய்கள்!

எஜமான விசுவாசம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது நாய்கள். ஆனால் அந்த நாய்களுக்கு ரோஷம் வந்து விட்டால் என்ன நடக்கும்? பின்வரும் சம்பவத்தைப் படித்துப் பாருங்கள் விளங்கும்.

இந்தோனேசியாவின் மனாடோ நகரைச் சேர்ந்த அன்ட்ரே லும் பொகா (50 வயது) ன்பவர் சுற்றுலா செல்லும் அவசரத்தில் தனது நாய்களுக்கு உணவளிக்க மறந்து சென்று விட்டார். இந்நிலையில் இரண்டு வாரங்கள் கழித்து சுற்றுலாவிலிருந்து திரும்பிய அவர் வீட்டுக் கதவைத் திறந்தவுடன், 7 நாய்களும் அவர் மீது பாய்ந்து கடித்துக்குதறி அவரை இழுத்துச் சென்று அவரது உடல் தசையை உண்ண ஆரம்பித்துள்ளன. அன்ட்ரேலும்பொகா வீடு திரும்பி 5 நாட்களாகியும் அவரது பயணப் பெட்டி வீட்டின் வாசல் கதவுக்கு வெளியே தொடர்ந்து இருப்பதைக் கவனித்து சந்தேகம் கொண்ட அவரது அயல் வீட்டுக் காவல்காரர், அந்த வீட்டிற்கு அருகில் சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து வயிற்றைக் குமட்டும் நாற்றம் வருவதை உணர்ந்த அவர், உடனடியாக காவல் நிலையத்தைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து முறையீடு செய்துள்ளார்.

அந்த வீட்டை முற்றுகையிட்ட போலீஸாருக்கு அதிர்ச்சி அன்ட்ரேலும்பொகாவின் கடித்துக் குதறப்பட்ட தலை சமையலறையிலும் உடல் வீட்டுக்கு முன்பாகவும் காணப்பட்டன. அத்துடன் ஏனைய இரு நாய்களது எலும்புக்கூடுகளும் அங்கு காணப்பட்டன. 14 நாட்களாக பட்டினியில் இருந்த நாய்கள், பசி தாங்காமல் அயல்வீடுகளின் நாய்களை கடித்து உண்டதுடன் கடைசியில் தமது எஜமானரையே தமது பசிக்கு இரையாக்கியுள்ளன.

இதனால நாம சொல்ல வரும் சேதி என்னனா..

நாய்கள் என்றால் வாலை மட்டுமே ஆட்டிக் கொண்டிருக்கும் என்று நினைக்கும் எஜமானர்களே தெரிந்து கொள்ளுங்கள். நாய்களுக்கு வால் மட்டுமல்ல வாயும் உண்டு!

வஞ்சிக்கப்பட்டால் நாய்களுக்குக் கூட ரோஷம் வருகிறது. தோழர்களே அப்படியெனில் நமக்கு?

2 comments:

  1. நாயை விட
    கொடூரமான மிருகம்
    மனிதன் என்பதை தோழர்
    மறந்துவிட வேண்டாம்
    எல்லோருக்குள்ளும்
    ஒரு மிருகம் உறங்கிக்
    கொண்டிருக்கிறது நாயை விட
    கொடூரமான மிருகம்
    மனிதன் என்பதை தோழர்
    மறந்துவிட வேண்டாம்
    எல்லோருக்குள்ளும்
    ஒரு மிருகம் உறங்கிக்
    கொண்டிருக்கிறது

    ReplyDelete
  2. எல்லோருக்குள்ளும் ஒரு மிருகம் உறங்கிக் கொண்டிருப்பது உண்மைதான் தோழரே! ஆனால் அது எழ வேண்டிய நேரத்திலும் எழாமல் கும்பகர்ண உறக்கம் போட்டுக் கொண்டிருப்பதுதான் பிரச்சனையே.

    கருத்துக்கு நன்றி தோழர் தமிழ் யாளி!

    ReplyDelete