Tuesday, September 6, 2011

எங்கே இருக்கின்றீர்கள் நண்பர்களே?

ஏனோ தெரியவில்லை இப்பொழுதெல்லாம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. பழைய நினைவுகளை மனம் அசை போட்டு ஆனந்தப்படுகிறது. மலைச் சாலையில் பயணிக்கும் போது கீழே எட்டிப் பார்த்து ரம்மியமாக ரசிப்பதைப் போல.

இப்படியான ஒரு நினைவுத் தேடலில் பரண் மேல் இருந்த பழைய புத்தக மூட்டையை தூசு தட்டிப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது 1998ம் வருட நாட்குறிப்பு (Dairy) கண்ணில் சிக்கியது. அப்போதெல்லாம் எனக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இருந்தது. யாருக்கும் புரியாத கிறுக்கலான கையெழுத்தில் (தற்போது எனக்கே புரியவில்லை என்பது வேறு விஷயம்) எழுதுவேன். சென்னை என்ற எந்திரலோகம் வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அப்பழக்கம் கைவிட்டுப் போனது. ஆனால் நாட்குறிப்பு எழுதுவதின் அருமை பின்னாளில் புரட்டிப் பார்க்கும் போதுதான் தெரிகிறது.

1998 என்பது நான் ஐடிஐயில் படித்துக் கொண்டிருந்த காலம். நாட்குறிப்பின் பக்கங்களைப் புரட்டப் புரட்ட என் நினைவுகளை விட்டு அகன்று போன பல்வேறு விஷயங்களும் காட்சிகளாக மனத் திரையில் விரிந்தது.

காலத்தின் சுழற்சியில் நண்பர்களையெல்லாம் நான் மறந்து விடுவேன் என்று அப்போதே நினைத்திருந்திருந்தேனோ என்னவோ எங்கள் பிரிவில் படித்த 25 நண்பர்களின் பெயர்களையும் அவர்களின் ஊர்களையும் கடைசி பக்கத்தில் எழுதி வைத்திருந்திருக்கிறேன். ஒவ்வொரு பெயரையும் உச்சரித்தபோது அவர்களோடு கழிந்த வசந்த பொழுதுகள் நினைவில் நிழலாடியது.

காலம்தான் எத்தனை விசித்திரமானது! பிரியவே கூடாது, முடியவே கூடாது என்று நினைத்துப் பழகிய எத்தனை நட்புகளை நம்மிடமிருந்து லாவகமாகப் பிரித்து விட்டுருக்கிறது! ஒருவேளை இந்தப் பதிவை என் நண்பர்களோ அல்லது அவர்களோடு தொடர்புடையவர்கள் கண்டால் மீண்டும் அந்த வசந்த நினைவுகளை மீட்டெடுக்கலாம் என்ற நப்பாசையோடு அந்த 25 நண்பர்களின் பெயர்களையும் ஊர்களையும் இங்கே பதிவிடுகிறேன். இவர்களில் சிவப்பு நிறத்தில் குறிப்பிடப்பட்ட நான்கு பேர் மட்டும் என்னுடன் ஒரே நிறுவனத்தில் பணியிலிருப்பதால் தொடர்பில் இருக்கிறார்கள்

1.அகிலன்
புளியங்கொட்டாரம்.

2.ஜான் கிளிட்டஸ்
தக்கலை,குமரி மாவட்டம்.

3.ஹமீது உசேன்
தாழையூத்து.

4.S.முத்து
ராமானுஜம்புதூர்

5.E.முத்துக்குமார்
V.M.சத்திரம்,பாளை.

6.ஜெயராஜ்,
கருங்குளம்.

7.சையது அலி
மூலக்கரைப்பட்டி.

8.R.காளிராஜ்
திருமலாபுரம்,கடம்பூர்.

9.சுப்ரமணியன்
தியாகராஜநகர், பாளை.

10.சந்திரமோகன்
சங்கரன்கோவில்

11.சோழ பாண்டிய ராஜா
பாளையங்கோட்டை.

12.இராஜ்குமார்
சுத்தமல்லி.

13.சதீஷ் குமார்
தி.நகர், பாளை.

14.பத்மநாபன்
சங்கர் நகர்.


15.ராஜதுரை
பாளையங்கோட்டை

16.லிங்க ராஜா
சிவந்திபுரம்.

17.பிரம்மநாயகம்
விக்கிரமசிங்கபுரம்


18.சுடர் ஒளிவு
பாவூர்சத்திரம்

19.சுந்தர் ராஜ்
பட்டக்காடு

20.சண்முகலிங்கம்
இலத்தூர்.


21.கணேசமூர்த்தி
கோவில்பட்டி


22.ஐயப்பன்
பழைய பேட்டை

23.இசக்கிப் பாண்டியன்
வள்ளியூர்

24.சுபாஷ்
நாகர்கோவில்

25.சுரேஷ்
மாயமான்குறிச்சி.


ஒரு மிகப்பெரும் பிரிவை நாம் சந்திக்க இருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் ஐடிஐயின் கடைசி நாளில் புன்னகையோடு விடைபெற்றுக் கொண்ட அந்த முகங்களை நினைத்த போது விழிகளில் தேங்கிய நீருக்கு அணை போட முடியவில்லை!

2 comments:

  1. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete
  2. உங்கள் பிளாக் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள்.

    ReplyDelete