Sunday, December 11, 2011

'காலரா' -சில தகவல்கள்

காலரா என்ற பெயரைக் கேட்டவுடனேயே நமக்கு பீதியைக் கிளப்புகிறது. மருத்துவம் வளர்ந்துவிட்ட இக்காலத்திலும் இந்நோயினால் கணிசமானோர் மரணமடைகின்றனர். இந்நோய் பற்றிய சரியான விழிப்புணர்வின்மையும் தாமதமான சிகிச்சையாலுமே பெரும்பாலும் இந்த மரணங்கள் நிகழ்கின்றன. தமிழகத்தில் மழையின் பாதிப்பால் காலரா பரவி வருவதாக செய்தி வரும் இவ்வேளையில் இது பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்வது அவசிமென்பதால் இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்நோய் Vibrio
Cholerae என்ற நுண்கிருமிகளால்
உண்டாகிறது. அசுத்தமான
குடிநீரால்தான் வேகமாக இந்நோய்
பரவுகிறது. அதிக அளவு வெப்பம்
உடைய, மனித நெருக்கம் உடைய
பகுதிகள்தான் பெரும்பாலும்
பாதிக்கப்படுகின்றன. ஒருவருக்குஇந்நோய் உண்டானால்,
அவர் வெளியேற்றும் மலத்தில்
இருந்து வெளியேறும்
ஆயிரக்கணக்கான ‘விப்ரியோ’ கிருமிகள்
மற்றவருக்கு இந்நோயை பரப்பக்
காரணமாகின்றன. ‘விப்ரியோ’ நோய்க்
கிருமிகள் உடைய நீரை அந்தப்
பகுதியைச் சேர்ந்த
அனைவருமே பருகுவதால் அந்தப்
பகுதியில் உள்ள அனைவருமே நோயால்
பாதிக்கப்படுகின்றனர்.

நோயின் அறிகுறிகள் : நோயின்
தாக்குதலுக்கு ஆளான நோயாளிக்கு,
திடீரென்று வயிற்றுப் போக்கு ஏற்படும்.
வயிற்றில்
வலியோ அல்லது வேறு தொல்லைகளோ இருக்காது.
வயிற்றுப்போக்குடன், வாந்தியும்
உண்டாகும். ‘வயிற்றுப் போக்கு’
என்றால் சாதாரணமாக
ஏற்படுவது போல் ஒரு முறை,
இருமுறை என்றெல்லாம் போகாது.
தொடர்ந்து பல முறை போய்க்
கொண்டே இருக்கும். ‘காலரா கட்டில்’
என்ற
ஒருவகை கட்டில்களிலேயே நோயாளிகளை மருத்துவ
மனையில்படுக்க வைத்திருப்பர். அந்த
கட்டிலில் மலம் கழிக்க ஏதுவாக
ஒரு ஓட்டை இருக்கும். அந்த
ஓட்டைக்கு நேர்க் கீழே,
ஒரு வாளி வைக்கப்பட்டிருக்கும்.
நோயாளி தொடர்ச்சியாக மலம் கழித்துக்
கொண்டே இருப்பார். அவை அந்த
வாளியில் விழுந்து கொண்டே இருக்கும்.
உடலிலிருந்து எவ்வளவு நீர்
வெளியேறியுள்ளது என்பதை அறியவும்
இதுஉதவும். மிகவும் தண்ணீராக
வெளியேறும். வயிற்றுப்போக்கில்,
குடல்களில் உள்ள
Mucusம்
சேர்ந்து வெளியேறும். இந்த மலம்
‘சோற்றுக் கஞ்சி’ போல் இருக்கும்.
அதனால் இதை சோற்றுக் கஞ்சி மலம்
என்றே அழைப்பர். அதிக
அளவு வயிற்றுப்போக்கால்,
உடலிலிருந்து ஏராளமான நீர் வெளியேறும், அதனால்
உடலுக்கு தேவையான ரத்த ஓட்டம்
பாதிக்கப்படும். உடலில் உள்ள நீரும்,
மற்ற சத்துப்பொருள்களும் அதிக
அளவு வெளியேறுவதால், “நீர்க்
குறைவு” அறிகுறிகள் தோன்றும்.
உடலில் உள்ள தசைகள் இறுகும், தோல்
சில்லிட்டு விடும், சுருக்கங்கள்
ஏற்படும்.
குறைவான இரத்த ஓட்டத்தால் தோல்
வெளுத்து விடும். கன்னங்கள்
குழிவிழுந்து விடும். இரத்த அழுத்தம்
குறைந்து கொண்டே வரும்.
நாடித்துடிப்பு வெகு வேகமாக
இருக்கும். சிறுநீர்
வெளியேறுவது குறைந்து கொண்டே வரும்.
இந்நிலையில் ‘நீர்க்குறைவு’
சிக்கலை சரிசெய்யாவிட்டால்,
நோயாளி மரணமடைந்து விடுவார்.

பரிசோதனை :
‘மலம்’ பரிசோதனையில்
‘விப்ரியோ’ கிருமிகளை எளிதில்
கண்டறிய முடியும். சாதாரணமாக
இக்கிருமியை அழிக்கவல்ல
உயிர்க்கொல்லி மருந்து பரிசோதனையையும்
(Anti-bioticsensitivity test)
செய்து பார்க்கலாம்.

மருத்துவம்:
நீர்க்குறைவு குறைபாட்டை உடனடியாக
சரிசெய்யவேண்டும். ‘குளுகோஸ்’
கலந்த திரவங்களையும், சோடியம்,
பொட்டாசியம் கலந்த திரவங்களையும்,
சிரைகள் மூலம் (Intra venous)
வேகமாக செலுத்த வேண்டும். கொதிக்க
வைத்த தண்ணீரைத்தான் பயன்படுத்த
வேண்டும். கொதித்து ஆறிய தண்ணீரில்
ஒரு லிட்டருக்கு இருபது கிராம்
குளுகோஸ், சமையல் உப்பு 3.5 கிராம்
பொட்டாசியம் குளோரைடு 1.5 கிராம்,
சோடியம் பைகார்பனேட் 2.5 கிராம்
கலந்து அந்த கரைசலை வாய் மூலம்
கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
நீர்க்குறைவை ஈடு செய்வது தான்
முதல் கடமையாக இருக்க வேண்டும்.
கூடவே “விப்ரியோ” கிருமிக்கு சரியான
உயிர்க்கொல்லி மருந்துகளை கொடுக்க
வேண்டும். சாதாரணமாக
“டெட்ராசைக்கிளின்”, செப்ட்ரான்
வகை மருந்துகள் பயன் உடையதாக
இருக்கும். எவ்வளவுக்கு அதிகமாக
குளுக்கோஸ் ஏற்றுகிறோமோ,
அவ்வளவு விரைவில்
நீர்க்குறைவு ஈடு செய்யப்படும்.
அதனால் பெருமளவில் மரணத்தைத்
தவிர்க்க முடியும்.
நோயுற்றவரை உடனடியாக,
தொற்று நோய் மருத்துவமனையில்
சேர்த்து மருத்துவம் பார்த்தல் அவசியம்.

வருமுன் காப்பது :
இப்பொழுது காலரா தடுப்பூசிகள்,
சுகாதாரத் துறையால்
போடப்படுகின்றன. அதை போட்டுக் கொள்ளலாம். சுத்தமான
தண்ணீரையே பயன்படுத்த வேண்டும்.
கொதிக்க வைத்தத் தண்ணீரைப்
பயன்படுத்த வேண்டியது அவசியம்.
சுற்றுப்புறத்தை சுத்தமாக
வைத்திருக்க வேண்டும். தெருக்களில்
மலம் கழித்தல் போன்ற
பழக்கங்களை முழுமையாகத் தவிர்க்க
வேண்டும். சுத்தமான, சுகாதாரமான
முறையில்
கழிப்பறைகளை வைத்திருக்க
வேண்டும். அசுத்தமான சுற்றுப்புறம்,
நோயாளியுடன் நெருக்கம்,
நோயாளி பயன்படுத்திய பொருள்கள்
ஆகியவற்றை தவிர்த்தல் மிகவும்
முக்கியம்.

தெருக்களில் அசுத்தமான
சூழ்நிலையில் தயாரிக்கப்படும்
உணவுப் பொருட்கள், ஈ மொய்த்த
பண்டங்கள் ஆகியவற்றை உண்ணாமல்
தவிர்ப்பது மிகவும் அவசியம். நோயின்
அறிகுறிகள் தெரிந்த
உடனே மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்து சென்று மருத்துவம்
செய்தால் உயிர்பலி போன்ற
ஆபத்துக்களை பெருமளவில்
தடுக்கலாம்.
நீர்க்குறைபாட்டை ஈடு செய்வது,
சரியான உயிர்க் கொல்லி மருந்துகளைக்
கொடுப்பது,
போன்றவற்றை உடனே செய்வதன்
மூலம் நோயின் வீரிய
தன்மையை பெருமளவு குறைக்கலாம்.
சுத்தமான சுற்று சூழல்,
ஆரோக்கியமான உடல்நிலை, சரியான
முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள்,
கொதிக்க வைத்த தண்ணீர், நோய் தடுப்பூசி போட்டு கொள்வது, நோயின்
ஆரம்ப நிலையிலேயே சரியான மருத்துவம் செய்தல் போன்றவை இருப்பின், காலரா வராது என்பது உறுதி!

நன்றி:
'கீற்று'- தளம்

No comments:

Post a Comment