Thursday, February 11, 2010

இடிபாடுகளுக்குள் 29 நாட்கள்.!

உணவு தண்ணீரின்றி மனிதன் ஒரு வாரம் இருப்பதே பெரிய விஷயம். இந்நிலையில் 29 நாட்கள் அதுவும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட ஒரு மனிதர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார் என்றால் அதிசயம் இல்லையா?

அண்மையில் ஹைதியில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட Muncie என்ற இந்த 28 வயது மனிதர் 29 நாட்கள் மரண போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டார். இடிபாடுகளுக்குள் இவரது கை வெள்யே தெரிந்ததைப் பார்த்த மீட்புக்குழுவினர் ஏதோ பிணம் என்று நினைத்து வெளியே எடுத்தனர். பின்பு லேசான சுவாசம் இருப்பது தெரிந்ததும் மருத்துவமனையில் அனுமதித்து பிழைக்க வைத்தனர்.

No comments:

Post a Comment