Saturday, February 13, 2010

சூடான டீயா? ஆ...பத்து.!

சூடான டீயை ஆவி பறக்க அவசரமாய் குடிப்பவர்களா நீங்கள்? கொஞ்சம் சூடு குறைந்தாலும் நீங்கள் ரொம்ப சூடாகி விடுவீர்களா? அப்படியென்றால் நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சூடான செய்திதான் இது. கொஞ்சம் ஆற அமர படியுங்கள்.

அதிக சூடாக டீ குடிப்பவர்களுக்கு உணவுக்குழாய் புற்றுநோய் ட்ர(Oesophagus cancer) வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவ ஆய்வில் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். புற்றுநோயின் பல்வேறு வகைகளில் ஒன்று உணவுக்குழாய் புற்றுநோயாகும். இந்நோயால் உலகில் ஆண்டுக்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர். மும்பையிலுள்ள டாடா நினைவு மருத்துவனை நிபுணர்கள் 1500 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் பின்வரும் தகவல்கள் அறியப்பட்டன.

வாய் முதல் இரப்பை வரையுள்ள உணவுக்குழாய் மிக மிருதுவானது. அதிக சூடாக டீ குடிப்பதால் உணவுக்கழாயின் சுவர்கள் அரிக்கப்பட்டு திசுக்கள் பலவீனமாகின்றன. இதனால் கேன்சர் கட்டி ஏற்படும் அபாயமுள்ளது.

பான்பராக், புகையிலை போடுபவர்களுக்கு 1.1 மடங்கும் பீடி குடிப்பவர்களுக்கு 1.8 மடங்கும் சிகரெட் பிடிப்போருக்கு 2 மடங்கும் மது அருந்துவோருக்கு 1.8 மடங்கும் கேன்சர் வரும் வாய்ப்புள்ளது. இவற்றையெல்லாம் விட சூடாக டீ குடிப்போருக்கு 4 மடங்கு அதிகமாக வாய்ப்புள்ளதாம்.

உலகின் வேறு சில நாடுகளிலும் இதே போன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டு இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் கேன்சர் ஆராய்ச்சி இதழான International cancer epidoliogy ல் இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

Thursday, February 11, 2010

இடிபாடுகளுக்குள் 29 நாட்கள்.!

உணவு தண்ணீரின்றி மனிதன் ஒரு வாரம் இருப்பதே பெரிய விஷயம். இந்நிலையில் 29 நாட்கள் அதுவும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட ஒரு மனிதர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார் என்றால் அதிசயம் இல்லையா?

அண்மையில் ஹைதியில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட Muncie என்ற இந்த 28 வயது மனிதர் 29 நாட்கள் மரண போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டார். இடிபாடுகளுக்குள் இவரது கை வெள்யே தெரிந்ததைப் பார்த்த மீட்புக்குழுவினர் ஏதோ பிணம் என்று நினைத்து வெளியே எடுத்தனர். பின்பு லேசான சுவாசம் இருப்பது தெரிந்ததும் மருத்துவமனையில் அனுமதித்து பிழைக்க வைத்தனர்.

Thursday, February 4, 2010

குழந்தைக்குள் குழந்தை.!

சீனாவில் 9 வயது சிறுமி குழந்தை பெற்று பரபரப்பு ஏற்படுத்தினாள். பள்ளியில் படிக்கும் சக மாணவனோடு ஏற்பட்ட உறவால் கர்ப்பமான இச்சிறுமிக்கு 29.1.10 அன்று அறுவை சிகிச்சை மூலம் 2.75kg எடையுள்ள குழந்தை பிறந்தது.
சீனாவின் Shangaiயிலுள்ள மருத்துவமனைகள் தரும் தகவல்படி கருக்கலைப்பு செய்யும் இளம்பெண்களில் 30% பேர் பள்ளி குழந்தைகளாம்!

ஆசியாவிலேயே மிகக்குறைந்த வயதில் குழந்தை பெற்றது இந்த சிறுமிதானாம். அப்படியென்றால் உலகிலேயே இள வயது தாய் யார் என்பதற்கான விடை தேடி விக்கிபீடியாவுக்குள் பார்த்தால் இதை விட அதிர்ச்சியான செய்தி இருந்தது. மேலே படத்திலுள்ள சிறுமிதான் உலகிலேயே குறைந்த வயதில் குழந்தை பெற்றுக்கொண்ட பெண்.
பெரு நாட்டை சேர்ந்த Lina Medina என்ற இந்த சிறுமி தாய்மையடைந்தபோது 5 வயதே ஆகியிருந்தது.!
1933ம் ஆண்டு செப்டம்பர் 27ல் பிறந்த Lina வுக்கு 1939, மே14ல் அறுவை சிகிச்சை மூலம் 2.7Kg எடையுள்ள ஆண் குழந்தை பிறந்தது.
Lina medina 76 வயது கடந்து இன்னும் உயிருடன் இருக்கிறார். அவர் மகன் 40வது வயதில் Bone marrow என்ற நோயால் இறந்தார்.