மேலேயுள்ள படத்தில் இந்தோனேசியா, அந்தமான், பங்களாதேசம், இந்தியா இவையனைத்தும் ஒரே தட்டில் இருப்பதைக் காணலாம். இந்த தட்டின் எல்லைப் பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது நினைவிருக்கலாம். அதே போல இரு அமெரிக்க கண்டங்களுக்கும் இடையில் சிறியதாக கரிபியன் தட்டு இருப்பதைக் காணலாம். இத்தட்டோடு வட அமெரிக்க பகுதி தட்டு உரசியதால் ஏற்பட்டதே அண்மையில் ஹைதியில் பெறும் சேதம் உண்டாக்கிய பூகம்பமாகும்.
பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் சேர்ந்திருந்த பகுதிகள் பிரிந்ததற்கும் பிரிந்திருந்த பகுதிகள் சேர்ந்ததற்கும் இந்த நகரும் தட்டுக்களே காரணமாகும். இன்னொரு செய்தி, இமயமலை ஒரு காலத்தில் கடலாக இருந்ததாக நாம் கேள்விப்பட்டிருப்போம். இதற்கும் இந்த நகரும் தட்டுக்களே காரணம் என கருதப்படுகிறது. அதாவது இந்திய பிளேட், ஆசிய பிளேட் ஆகிய இரண்டும் வடக்கு நோக்கி நகர்கின்றன. இதில் ஆசியப் பிளேட்டை விட இந்திய பிளேட் வேகமாக நகர்கிறது என்றும் அதனால் உண்டான அழுத்தத்தில் எழுந்ததே இமயமலை என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
--------------------------------------------------------------
Ovi Mail: Easy setup in minutes
http://mail.ovi.com
Tweet | ||||||