Friday, November 12, 2010

வாட்டர் பாட்டில் பயன்படுத்துவோர் கவனத்திற்கு

நம்மில் பெரும்பாலனோர் மினரல் வாட்டர் பாட்டில்களை மறு உபயோகம் செய்வதால் ஏற்படும் ஆபத்தினை அறியாமல் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம். வீட்டிலும், பணியிடத்திலும், பிரபல நிறுவனங்களின் (எ.கா. அக்வபினா, பிஸ்லெரி,கின்லே, நெஸ்லே) மினரல் வாட்டர் பாட்டில்களை மறு உபயோகம் செய்து வருகிறோம். இது கண்டிப்பாக உடல் நலத்திற்கு உகந்தது அல்ல.

இது போன்ற மினரல் வாட்டர் பாட்டில்கள், பாலீதீன் டேரிப்திலட் என்ற பொருளை உபயோகித்து தயாரிக்கப்படுகிறது. இதில் ஹைட்ராகிளைமின் உள்ளது. இந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் ஒருமுறை உபயோகிக்க மட்டும் பாதுகாப்பானது. அதிகபட்சம் ஒரு வாரம் மட்டுமே அதிக சூடு இல்லாத இடத்தில் வைத்து உபயோகிக்கலாம். அதற்க்கு மேல் மீண்டும் மீண்டும் பாட்டில்களைக் கழுவி உபயோகிப்பதால் இதிலுள்ள பிளாஸ்டிக் கரைந்து கார்சினொஜென்ஸ் (புற்று நோயை ஏற்படுத்தக்கூடிய வேதியியல் துகள்கள்). குடிக்கும் நீரில் கலக்க ஆரம்பித்து விடும். எனவே மறு உபயோக தகுதியுள்ள வாட்டர் பாட்டில்களை மட்டும் உபயோகிக்க வேண்டும்.

மறு உபயோகத்திற்கான பாட்டில்கள் எது என்பதை எப்படி தெரிந்து கொள்வது? பாட்டில்களின் அடிப்பகுதியில் முக்கோண சின்னமும், அதில் ஒரு எண்ணும் பொறிக்கப்பட்டிருக்கும். அந்த எண் ஐந்து மற்றும் அதற்க்கு மேல் இருந்தால் அந்த பாட்டில் மீண்டும் மீண்டும் உபயோகிக்க தகுதியானது. ஐந்திற்கு கீழே இருந்தால் அதை மறு உபயோகம் செய்யக்கூடாது. எல்லா மினரல் வாட்டர் பாட்டில்களிலும் பொறிக்கப்பட்டிருக்கும் நம்பர் ஒன்று. எனவே அது மறு உபயோகத்திற்கு சிறிதும் தகுதியற்றது. (இவை வெளியிடும் வேதியியல் பொருட்கள் புற்று நோயை உண்டாக்கும் குணம் படைத்தவை ).

எனவே நம்பர் ஐந்தோ அதற்கு மேலோ பொறித்த பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலை வாங்கி உபயோகிப்போம், ஆரோக்கியம் காப்போம்.

1 comment:

  1. Tamil Technology News, Tamil Health Care Tips, to Know more Tamil Health Articles Visit http://www.valaitamil.com/health

    ReplyDelete